டெல்லியில் உள்ள ரயான் இன்டர்நேஷனல் பள்ளியில் 7 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்
Sep 23 2017 10:04AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியின் குருகிராம் பகுதியில் உள்ள ரயான் இன்டர்நேஷனல் பள்ளியில் 7 வயது மாணவன், கழுத்து அறுக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்துகிடந்தான். இச்சம்பவம் நாடெங்கிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பள்ளிப் பேருந்து நடத்துனர் அசோக் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த கொலை வழக்கு, சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொலை வழக்கின் ஆவணங்களை பெற்றுக்கொண்ட சிபிஐ அதிகாரிகள், விசாரணையை தொடங்கியுள்ளனர்.