பீகாரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது 98 வது வயதில் பொருளாதார பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று சாதனை

Sep 27 2017 10:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், தனது 98 வது வயதில் பொருளாதார பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திரு. ராஜ்குமார் என்பவர் கடந்த 1938ம் ஆண்டு, பொருளாதார பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக மேற்கொண்டு படிப்பை தொடரமுடியாமல் போனது. இந்நிலையில், கடந்த 2015 ம் ஆண்டு, நாலந்தா திறந்தநிலை பல்கலைகழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பித்திருந்தார். அவரது விண்ணப்பத்தை அந்த பல்கலைகழகம் ஏற்றுக்கொண்டதையடுத்து அவரது குடும்பத்தினரின் ஆதரவோடு பட்டப்படிப்பில் சேர்ந்தார். அவர் தற்போது முதுநிலை பட்டப்படிப்பை 98 வயதில் முடித்துள்ளார். அவர் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். தள்ளாத வயதிலும், கல்வித்துறையில் ராஜ்குமார் சாதனை படைத்திருப்பது அவரது குடும்பத்தினரை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி இக்‍கால இளைஞர்களுக்‍கும் அவரது விடா முயற்சி பெரும் உந்துசக்‍தியாக அமைந்துள்ளது என்பதை மறுக்‍க இயலாது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00