ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றுள்ள தூய்மை இந்தியா திட்ட சின்னம், பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய விவரங்களையும் வெளியிட முடியாது : ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Oct 16 2017 11:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றுள்ள தூய்மை இந்தியா திட்ட சின்னம் பற்றியும் அதில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய விவரங்களையும் வெளியிட முடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் புதிதாக வெளியிடப்பட்ட 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில், பிரதமர் திரு. நரேந்திர மோடி கொண்டு வந்த தூய்மை இந்தியா திட்டத்தின் சின்னமான மகாத்மா காந்தியின் மூக்கு கண்ணாடி உருவம் இடம்பெற்று உள்ளது. ரூபாய் நோட்டுகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் சின்னம் இடம் பெற்றது எப்படி என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியிடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. இதற்கு பதில் அளித்துள்ள ரிசர்வ் வங்கி, தகவல் அறியும் உரிமை சட்ட பிரிவு 8 ன் கீழ் ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பு மற்றும் அதில் உள்ள பதுகாப்பு அம்சங்கள் பற்றிய விவரங்களை வெளியிட முடியாது என்று பதில் அளித்து உள்ளது.