டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசிடம் முதல் தவணையாக ரூ.30 கோடி, 5 பிளேட்லெட் இயந்திரங்கள் கேட்கப்பட்டுள்ளது : புதுச்சேரி முதலமைச்சர் திரு.நாராயணசாமி
Oct 16 2017 12:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசிடம் முதல் தவணையாக 30 கோடி ரூபாயும், 5 பிளேட்லெட் இயந்திரங்களும் கேட்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் திரு.நாராயணசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வந்த மத்திய குழு புதுச்சேரியிலும் நேற்று ஆய்வு செய்தது. அப்போது, தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் பல்வேறு மருத்துவமனைகளுக்கும் சென்று பார்வையிட்ட மத்திய குழுவினர், நோய்த் தாக்கம் அதிகம் நிறைந்த பகுதிகளிலும் ஆய்வு செய்தனர். பின்னர் நேற்றிரவு சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் திரு.நாராயணசாமியுடன் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, புதுச்சேரியில்டெங்கு பாதிப்பை குறைக்க மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய குழுவிடம் அவர் எடுத்துக் கூறினார்.