கேரளாவில் முழுஅடைப்பு போராட்டத்தால் கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம் - பயணிகள் கடும் அவதி
Oct 16 2017 2:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முழு அடைப்பு நடைபெற்று வருகின்றது. இதனால் மாநிலம் முழுவதும் இன்று பேருந்துகள் ஓடவில்லை. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். முழு அடைப்பையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பந்த்-ஐ பயன்படுத்தி குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் எச்சரித்துள்ளார். இதேபோன்று மாநிலத்தின் முக்கிய நகரங்களான கொச்சி, திருச்சூர், இடுக்கி போன்ற பல்வேறு பகுதிகளிலும் இன்று கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.