பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில், கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - 7 பேர் உயிரிழப்பு - இடிபாடுகளுக்குள் சிக்கித்தவித்த சிறுமி உட்பட பலர் மீட்பு
Oct 16 2017 3:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்து கட்டடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் தாய்-தந்தையை இழந்த பெண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இஜிபுரா என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று காலை திடீரென எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதில் அந்த கட்டடம் முழுவதும் இடிந்து விழுந்து, நான்கு வீடுகள் தரைமட்டமாகின. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப்படையினர் இடிபாடுகளை அகற்றி வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். தாய் - தந்தையை இழந்த பெண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விபத்து நடந்த பகுதியை கர்நாடக அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டனர். விபத்தில் தாய்-தந்தையை இழந்த குழந்தையை அரசு தனது பாதுகாப்பில் எடுத்து வளர்க்கும் என்று அமைச்சர்கள் அப்போது தெரிவித்தனர்.