சிறுமி ஆருஷி கொலை வழக்கில் அவரது பெற்றோர், ராஜேஷ் தல்வார், நுபுர் தல்வார் அலகாபாத் நீதிமன்றம் விடுதலை : சிறை நடைமுறைகள் முடிந்து இருவரும் விடுதலை
Oct 17 2017 12:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிறுமி ஆருஷி கொலை வழக்கில் அவரது பெற்றோர், ராஜேஷ் தல்வார், நுபுர் தல்வார் ஆகியோரை அலகாபாத் நீதிமன்றம் விடுதலை செய்த நிலையில், சிறை நடைமுறைகள் முடிந்து, இருவரும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
டெல்லி அருகே உள்ள நொய்டாவைச் சேர்ந்த, பல் மருத்துவர்களான, ராஜேஷ் தல்வார், நுபுர் தல்வார் தம்பதியின் ஒரே மகளான, 14 வயதான ஆருஷி, கடந்த 2008-ம் ஆண்டு, வீட்டில் கழுத்தறுபட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவர்கள் வீட்டில் தங்கியிருந்து, வேலை பார்த்து வந்த ஹேம்ராஜ், வீட்டின் மொட்டை மாடியில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த இரட்டைக் கொலையை விசாரித்த காஜியாபாத் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வாருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கடந்த 2013-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து, இருவரும் காஜியாபாத் அருகேயுள்ள தாஸ்னா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து, அவர்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், இருவரையும் விடுதலை செய்து, கடந்த 12-ம் தேதி தீர்ப்பளித்தது. இதனையடுத்து, சிறை நடைமுறைகள் முடிந்து, இருவரும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
சிறையில் இருந்தபோது, மற்ற கைதிகளுக்கு அளித்த சிகிச்சைக்கான பணத்தை வாங்க, தல்வார் தம்பதியினர் மறுத்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விடுதலையான பிறகும், 15 நாட்களுக்கு ஒருமுறை சிறைக்கு வந்து, சிகிச்சை அளிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.