ஒடிசாவில் வெடி விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி : முதலமைச்சர் நவீன் பட்நாயக் உத்தரவு
Oct 19 2017 1:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒடிசாவில் ஏற்பட்ட வெடி விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்க, அம்மாநில முதலமைச்சர் திரு. நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டத்தில், உள்ள பாகல்பூர் பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில், சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மற்றொரு நிகழ்வாக, ஒடிஷா மாநிலம் ரூர்க்கேலாவில் தீபாளியையொட்டி பட்டாசுக்கடையில் விற்பனை நடைபெற்று வந்தபோது திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் கொழுந்து விட்டு எரிந்த தீயில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடையில் ஏற்பட்ட மின்கசிவே விபத்துக்குக் காரணம் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட வெடி விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவியும், படுகாயம் அடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் அளிக்க முதலமைச்சர் திரு. நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.