கொல்கத்தாவில் உள்ள எல்.ஐ.சி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து - பற்றி எரியும் தீயை அணைக்‍க தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டம்

Oct 19 2017 2:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொல்கத்தாவில் உள்ள எல்ஐசி கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து ஊழியர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவின் ஜவகர்லால் நேரு சாலையில் ஜீவன் சுதா என்ற மிகப்பெரிய வணிக வளாகம் ஒன்று உள்ளது. எல்.ஐ.சி. அலுவலகம், வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் இதில் செயல்படுகின்றன. 19 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தின் 16-வது தளத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் படிப்படியாக அந்த தளம் முழுவதும் பரவத் தொடங்கியது.

இதன் காரணமாக பணிக்‍கு வந்திருந்த ஊழியர்கள் அனைவரும் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மற்ற தளங்களுக்கும் தீ பரவும் அபாயம் இருந்ததால் அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் அவசர அவசமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 10 வண்டிகளில் வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயை முழுமையாக அணைத்த பிறகே சேத விவரம் தெரியவரும் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00