வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் : ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
Oct 22 2017 5:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து தகவல் பெறும் உரிமைச்சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அப்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்ததாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை தடுக்கும் விதமாக திருத்தப்பட்ட புதிய விதிமுறைகளின்படி வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமே என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அத்துடன், வங்கி கணக்குடன் ஆதார் இணைக்க அவசியமில்லை என வெளியான தகவலையும் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த உத்தரவை வங்கிகள் உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.