மணிப்பூர் இம்பால் நகரில் பலவிதமான மீன்களின் கண்காட்சி மற்றும் விற்பனை
Oct 22 2017 6:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரில் பலவிதமான மீன்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது.
மணிப்பூர்மாநிலம் இம்பால் நகரில் மீன்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் மீன்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது. இதில் பல்வேறு வகையான மீன்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் பல்வேறு உயிரி ஆராய்ச்சி நிறுவனங்கள் சார்பில் ஏராளமான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு உயிருடன் துள்ளிக்குதித்த மீன்களை பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர். பல்வேறு வகையான மீன்களை ஒரே இடத்தில் பார்த்து வாங்குவது மிகுந்த பயனளிப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.