விவசாயத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி புதுச்சேரியில் 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி
Nov 20 2017 4:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விவசாயத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி, புதுச்சேரியில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி நடைபெற்றது. கின்னஸ் சாதனைக்காக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, ஆயிரக்கணக்கானோர் கண்டு வியந்தனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஐந்தாயிரத்து 625 பரதநாட்டியக் கலைஞர்கள் அனைவரும் ஒன்றுகூடி, கின்னஸ் சாதனை முயற்சியாக, 26 புள்ளி 2 நிமிடங்களில் நாட்டியமாடினர். விவசாயத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட நாட்டியம், காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்நிகழ்ச்சி, கின்னஸ் சாதனைக்காக, புதுச்சேரி பரதநாட்டிய அமைப்பு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.