இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சந்திப்பு - இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை
Nov 24 2017 5:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி. சுஷ்மா ஸ்வராஜை, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே டெல்லியில் சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அரசுமுறை பயணமாக கடந்த செவ்வாய் அன்று இந்தியா வந்தார். முதலில் பெங்களூரு வந்த ரணில், கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்றார். நேற்று டெல்லி வந்த அவர், பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். பின்னர் குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்தையும் சந்தித்துப் பேசினார்.
இதனைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி தலைவர் திருமதி சோனியா காந்தி தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசினர். அந்த குழுவில் முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங், துணைத்தலைவர் திரு. ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற மேல்சபை துணைத்தலைவர் ஆனந்த் ஷர்மா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி. சுஷ்மா ஸ்வராஜை, ரணில் விக்ரமசிங்கே இன்று டெல்லியில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். தனது 4 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு ரணில் விக்ரமசிங்கே நாளை இலங்கை புறப்படுகிறார்.