மஹாராஷ்ட்ராவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்த விபத்து : ஒருவர் பலி - 3 பேர் காயம்

Nov 24 2017 5:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

வடமாநிலங்களில் கட்டட விபத்துகள் தொடர்கதையாகிவரும் நிலையில், மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் அடுக்‍குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார். 3 பேர் காயமடைந்துள்ளனர்.

மஹாராஷ்ட்ரா மாநிலம், தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் உள்ள 3 மாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. இன்று காலை 9 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில், கட்டட இடிபாடுகளில் சிக்‍கி ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்துள்ளனர். பலர் இடிபாடுகளில் சிக்‍கியுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்‍குழுவினர், காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். இடிபாடுகளில் சிக்‍கியுள்ளவர்களை மீட்க தீவிர நடவடிக்‍கை மேற்கொண்டு வருகின்றனர். வடமாநிலங்களில் தொடர்ந்து நடைபெறும் கட்டட விபத்துகள், அங்குள்ள மக்‍களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே, டெல்லியின் தைமூர் நகரில் ஒரு கட்டடம் இடிந்து விபத்துக்‍குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை என்று தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00