கொல்கத்தாவில் தோல்பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து : தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரம்
Nov 24 2017 5:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொல்கத்தாவில் உள்ள தோல்பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீயை அணைக்க தீ அணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் சவ்பாகா பகுதியில் செயல்பட்டு வரும் தோல்பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிறிய அளவில் பற்றிய தீ கட்டடம் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 7 தீயணைப்பு வண்டிகளில் விரைந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை என தீ அணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். பொருள் சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னழுத்த குறைபாடே இந்த தீ விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.