புதுச்சேரியில் கிரண்பேடி ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு : காங்கிரஸார் முற்றுகையிட்டதால் பரபரப்பு
Dec 10 2017 5:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி பிள்ளையார்குப்பம் பகுதியில் ஆய்வு நடத்த வந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை காங்கிரஸார் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில், இலவச அரிசி உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்திடாமல்
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
அலட்சியம் காட்டி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இலவச திட்டங்களை செயல்படுத்தவிடாமல் கிரண்பேடி தடையாக இருப்பதாகக்கூறி, அவர் செல்லும் இடங்களில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிள்ளையார்குப்பம் கிராமத்தில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு நடத்த வந்த கிரண்பேடிக்கு காங்கிரஸ் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இலவச திட்டங்களை தடுக்கும் துணைநிலை ஆளுநர் தங்களுக்கு தேவையில்லை என கோஷங்கள் எழுப்பினர்.