மன்மோகன் சிங் குறித்த பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு - ராகுல்காந்தி கண்டனம்

Dec 13 2017 4:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன் சிங் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறிய குற்றச்சாட்டு மோசமான முன் உதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது என்று திரு. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் வீட்டில் நடந்த விருந்தில் பாகிஸ்தான் தூதர், முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன் சிங் ஆகியோர் சேர்ந்து குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவை தோற்கடிக்க தேச விரோத ஆலோசனையில் ஈடுபட்டதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி குற்றம்சாட்டி உள்ளார். இதற்கு திரு. மன்மோகன் சிங் தகுந்த விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன் சிங் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறிய குற்றச்சாட்டு மோசமான முன் உதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது என்று திரு. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் முதன் முறையாக திரு. ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தபோது இதனை தெரிவித்தார். மேலும், பாரதிய ஜனதா தலைவர் திரு. அமித்ஷா மகனின் தொழில் முறைகேடு, ரஃபேல் போர் விமான ஊழல் போன்ற குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்காமல், திரு. மோடி மவுனமாக இருப்பதாகவும், விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்தும் அவர் பேச மறுப்பதாகவும் திரு. ராகுல் குற்றம் சாட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00