ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள இந்திய தூதரகம் மீது ராக்கெட் குண்டு வீச்சு - உயிர் சேதமில்லை என மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தகவல்

Jan 16 2018 12:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலால் பணியாளர்களுக்கு பாதிப்பு இல்லை என வெளியுறவு அமைச்சர் திருமதி.சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் ராக்கெட் குண்டு விழுந்துள்ளது. இந்திய தூதரகத்தின் மிக அருகே உள்ள வேலியில் இந்த குண்டு விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த தாக்குதலால் இந்திய பணியாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி.சுஷ்வா சுவராஜ் கூறியுள்ளார். தூதரக கட்டிடத்தில் சேதங்கள் இல்லை என வெளியுறவு செய்தி தொடர்பாளர் திரு.ராவீஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உயர் பாதுகாப்பு பகுதியான இங்கு இந்திய தூதரகத்தை குறிவைத்து ராக்கெட் குண்டு வீசப்பட்டதா? என்பது விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00