இலங்கையின் நெடுந்தீவு அருகே நடுக்‍கடலில் மீன்பிடித்துக்‍ கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 16 பேர் சிறைபிடிப்பு - எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக்‍ கூறி இலங்கை கடற்படை மீண்டும் அராஜகம்

Jan 16 2018 1:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக்‍ கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து அராஜக நடவடிக்‍கையில் ஈடுபட்டுள்ளது.

ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இருந்து நூற்றுக்‍கணக்‍கான படகுகள் மூலம் தமிழக மீனவர்கள் நேற்றிரவு இந்திய கடல் எல்லையை ஒட்டிய நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக்‍ கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்தில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக்‍ கூறி தமிழக மீனவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் 16 மீனவர்களை கைது செய்து அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் அனைவரும் இலங்கைக்‍குக்‍ கொண்டு செல்லப்பட்டதாகக்‍ கூறப்படுகிறது. இந்திய கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடிக்‍கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மேற்கொண்டு வரும் அராஜக நடவடிக்‍கை, சக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00