டெல்லியில் கடும் மூடுபனி : ரயில் போக்குவரத்து பாதிப்பு
Jan 18 2018 1:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் கடும் மூடுபனியுடன் குளிர் காற்றும் வீசுவதால் இன்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் வழக்கத்திற்கு மாறாக கடந்த பல நாட்களாக மூடுபனியுடன் குளிர் கடுமையாக காணப்படுகிறது. இதனால், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை நேரத்தில் வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை. நடைபாதைகளில் தங்கி இருப்பவர்கள் தீ மூட்டி குளிர் காய்கின்றனர். போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. எதிரில் வரும் வாகனங்கள் சரிவர தென்படவில்லை. இதன் காரணமாக முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்கள் மெதுவாக செல்கின்றன. 39 ரயில்கள் தாமதமாக வந்தன. 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 11 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டது. இன்று முழுவதும் மூடுபனி நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும், குறைந்தபட்ச தட்பவெப்ப நிலை 5 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.