நாட்டில் உள்ள பஸ்கள், வாடகைக்கார்கள் உள்ளிட்ட அனைத்து பயணிகள் வாகனங்களிலும் ஜி.பி.எஸ் கருவி : ஏப்.1 முதல் பொருத்துவது கட்டாயம்
Jan 18 2018 12:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டில் உள்ள பஸ்கள், வாடகைக்கார்கள் உள்ளிட்ட அனைத்து பயணிகள் வாகனங்களிலும் ஜி.பி.எஸ் என்று அழைக்கப்படுகிற இருப்பிடம் காட்டும் கருவியை பொருத்துவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
நாட்டில் உள்ள பஸ்கள், வாடகைக்கார்கள் உள்ளிட்ட அனைத்து பயணிகள் வாகனங்களிலும் ஜி.பி.எஸ் என்று அழைக்கப்படுகிற இருப்பிடம் காட்டும் கருவியை பொருத்துவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இது ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் இனி புதிதாக விற்பனை செய்யப்படுகிற வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்த வேண்டுமா என்பது பற்றி தகவல் இல்லை.