பங்கு வர்த்தகத்தில் தொடர்ந்து ஏற்றம் - சென்செக்‍ஸ் இரண்டாவது நாளாக 35 ஆயிரம் புள்ளிகளை கடந்ததால் முதலீட்டாளர்கள் உற்சாகம்

Jan 18 2018 12:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் இரண்டாவது நாளாக இன்று காலை 35 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உயர்வுடன் தொடங்கி சாதனை படைத்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையில் நேற்று காலை, வர்த்தகம் தொடங்கியது முதலே ஏற்றம் காணப்பட்டது. பிற்பகலில் 206 புள்ளிகள் உயர்ந்து, இதுவரை இல்லாத வகையில், 35 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்தது. இதே போன்று தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 10,760 புள்ளிகளை கடந்தது.

இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்று காலை, சென்செக்ஸ் 35 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உயர்வுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 395 புள்ளிகள் உயர்ந்து, 35,477 புள்ளிகளாகவும், தேசிய பங்குசந்தை நிஃப்டி 99 புள்ளிகள் அதிகரித்து 10,877 புள்ளிகளாகவும் இருந்தது.

தகவல் தொழில்நுட்பம், வங்கித்துறை பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் அதிகம் உயர்வு கண்டன. பல நிறுவனங்களின் காலாண்டு லாபம் அதிகரித்து இருந்ததாலும், பங்குகள் கூடுதல் லாபம் ஈட்டும் என்ற எதிர்பார்ப்பு காரணமாகவும், முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருவதால் பங்குச்சந்தை புதிய உயர்வை தொட்டதாக பங்குச்சந்தை ஆலோசகர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00