ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் படையினர் மீண்டும் அத்துமீறித் தாக்குதல் - தமிழகத்தைச் சேர்ந்த ராணுவவீரர் வீர மரணம்
Jan 18 2018 3:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் வீர மரணமடைந்தார்.
ஜம்மு-காஷ்மீரின் ஆர்.எஸ். புரா செக்டார் பகுதியில் பாகிஸ்தான் படையினர் நேற்றிரவு இந்திய நிலைகள் மீது குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். சிறிய ரக பீரங்கி குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர்.
இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்ட போதிலும், பாகிஸ்தானின் தாக்குதலில் தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகேயுள்ள பண்டார செட்டிபட்டியை சேர்ந்த சுரேஷ் என்ற வீரர் வீர மரணமடைந்தார். இந்தத் தாக்குதலில் எல்லையோரம் உள்ள கிராமப்புறங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.