திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு - வாக்காளர் ஒப்புகைச்சீட்டு முறை பயன்படுத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் பேட்டி
Jan 18 2018 4:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், 3 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்தன.
மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய 3 மாநில சட்டசபையின் பதவிக்காலமும் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைவதால், அம்மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஃபிப்ரவரி 18-ம் தேதி திரிபுரா மாநிலத்திற்கும், மேகாலயா, நாகாலாந்து ஆகிய இரு மாநிலங்களிலும் பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், தலைமை தேர்தல் ஆணையர் திரு. அச்சல் குமார் ஜோதி அறிவித்தார். வாக்காளர் ஒப்புகைச்சீட்டு முறை 3 மாநிலங்களிலும் பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தேர்தல் நடைபெறவுள்ள 3 மாநிலங்களிலும் மார்ச் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், 3 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்தன.