குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு மாளிகை, வண்ண விளக்குளால் மின்னும் காட்சி அனைவரின் கண்களுக்கும் விருந்தாக அமைந்துள்ளது
Jan 20 2018 11:02AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டில் வரும் 26ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகை வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கு அலங்காரத்தை குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் நேற்றிரவு தொடங்கி வைத்தார். இது பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இந்தாண்டு குடியரசு தின விழாவில், பத்து நாடுகளைச் சேர்ந்த பிரதமர்களும், அதிபர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.