ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் போலீசார் 8 பேர் படுகாயம்
Jan 20 2018 11:04AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவும் தீவிரவாதிகள் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் அமைந்துள்ள காவல் நிலையத்தில், போலீசார் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த தீவிரவாதிகள் திடீரென காவல் நிலையத்தின் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இந்த தாக்குதலில் காவல் நிலையத்தில் பணியிலிருந்த 8 போலீசார் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு சென்ற மீட்பு படையினர், காயமடைந்த போலீசாரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனையடுத்து, தப்பியோடிய தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.