ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்‍குதலில் போலீசார் 8 பேர் படுகாயம்

Jan 20 2018 11:04AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவும் தீவிரவாதிகள் பல்வேறு பகுதிகளில் தாக்‍குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் அமைந்துள்ள காவல் நிலையத்தில், போலீசார் வழக்‍கமான பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த தீவிரவாதிகள் திடீரென காவல் நிலையத்தின் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இந்த தாக்குதலில் காவல் நிலையத்தில் பணியிலிருந்த 8 போலீசார் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு சென்ற மீட்பு படையினர், காயமடைந்த போலீசாரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனையடுத்து, தப்பியோடிய தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00