தீவிரவாத செயல்களை ஒடுக்கும் நடவடிகையில் பாகிஸ்தான் தனது மனநிலையை மாற்றி கொள்ள வேண்டும்- ஐ.நா. சபையில் இந்தியா புகார்
Jan 20 2018 11:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தீவிரவாத செயல்களை ஒடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் தனது மனநிலைமையை மாற்றிக்கொள்ள வேண்டுமென ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஐ.நா.வுக்கான இந்திய தூதர் சையத் அக்பருதின், ஆசிய பிராந்தியத்தில் சர்வதேச நாடுகளுடன் இணைந்து அஃப்கானிஸ்தானில் அமைதியையும், ஸ்ரத்தன்மையையும் கொண்டுவர, இந்தியா தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகக் குறிப்பிட்டார். இதற்கு அஃப்கானிஸ்தான் மட்டும் ஒத்துழைப்பு அளித்தால் போதுமானதாக இருக்காது என தெரிவித்த அக்பருதின், பாகிஸ்தான் போன்ற நாடுகளும் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். அதற்காக, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்கும் நடவடிக்கையில் தனது மன நிலைமையை பாகிஸ்தான் மாற்றிக்கொண்டு, தீவிரவாத செயல்களை வேரறுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.