பீகாரில் அரசு மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழப்பு
Mar 22 2018 12:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பீகார் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், மின்சாரம் இல்லாததால் டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண், பரிதாபமாக உயிரிழந்தார்.
பீகார் மாநிலம் சாகர்ஸா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், மின்சாரம் இல்லாத நிலையில், டார்ச் வெளிச்சத்தில் பெண்மணி ஒருவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றதன் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது, காக்கி சீருடை அணிந்த மருத்துவமனையின் கடைநிலை ஊழியர் தையலிடும் காட்சியும் வெளியாகியுள்ளது. பெண்மணி ஒருவர் டார்ச்சை பிடித்துக்கொள்ள நடைபெற்ற இந்த சம்பவம் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், டார்ச் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல், பீகாரில் ஒரு மாதத்திற்கு முன்பு, இதே போன்று, டார்ச் வெளிச்சத்தில், பலருக்கு கண் அறுவை சிகிச்சை நடைபெற்ற பரபரப்பு அடங்குவதற்குள், மீண்டும் ஒரு அவலம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.