இந்தியாவின் பழமையான சாயல்களை ஓவிய கண்காட்சி : புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி துவக்கி வைத்தார்
Mar 22 2018 12:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவின் பழமையான சாயல்களை ஓவிய கண்காட்சியை, புதுச்சேரி மாநில முதலமைச்சர் திரு. நாராயணசாமி துவக்கி வைத்தார்.
துபாயை சேர்ந்த பெண் ஓவியர் ரெஞ்சனி தம்பி என்பவர், புதுச்சேரியில் தனது ஓவிய படைப்புகளை கண்காட்சியாக வைத்துள்ளார். அலியான்ஸ் பிரான்சிஸ் பள்ளியில் ஒருவார காலம் நடைபெறும் இக்கண்காட்சியை, முதலமைச்சர் திரு. நாராயணசாமி துவக்கி வைத்தார். இந்தியாவின் பழமையான சாயல்களை பரதிபலிக்கும் இந்த ஓவியங்கள் அழகாகவும், கலைநயத்துடனும் வரையப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள 23 பலவகையான ஓவியங்களை, கலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து பாராட்டி வருகின்றனர்.