உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட உன்னாவ் தொகுதி பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங்கை கைது செய்ய ஆணை - அலகாபாத் உயர்நீதிமன்றம் சிபிஐ-க்கு உத்தரவு
Apr 13 2018 6:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரப்பிரதேசத்தில் 17 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள உன்னாவ் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ. குல்தீப் சிங்கை கைது செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் சிபிஐ-க்கு உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதி பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள், தன் மகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக, பாதிக்கப்பட்ட 17 வயது இளம் பெண்ணின் தந்தை சுரேந்திரா சிங் காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து, பழைய வழக்கு ஒன்றில் சுரேந்திரா சிங் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்தார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பல தரப்புகளிலிருந்தும் கண்டனம் எழுந்தது.
இதனைதொடர்ந்து எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குல்தீப் சிங்கை கைது செய்ய சிபிஐ-க்கும் உத்தரவிட்டனர்.