தலித் வன்கொடுமை தடுப்பு சட்ட விவகாரத்தில் கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்
Apr 14 2018 2:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தலித் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகாரின் அடிப்படையில், விசாரணையின்றி யாரையும் கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இதற்கு மத்திய பாரதிய ஜனதா அரசே காரணம் என குற்றம்சாட்டிய தலித் அமைப்புகள், தாழ்த்தப்பட்ட மக்கள் விவகாரத்தில் பா.ஜ.க. இரட்டை வேடம் போடுவதாகவும் தெரிவித்தனர். இதனால், கடந்த 2-ம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, பாரத் பந்த் நடைபெற்றது. குஜராத், பீகார், ஒடிஷா, பஞ்சாப், டெல்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறி 11 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், தலித் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் சில பிரிவுகளை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.