புதுச்சேரியில் தலைமைச் செயலக அலுவலகத்திற்குச் சென்று அதிரடி ஆய்வில் ஈடுபட்ட முதலமைச்சர் நாராயணசாமி - தாமதமாக பணிக்‍கு வருவோர் மீது கடும் நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என எச்சரிக்‍கை

Apr 16 2018 5:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில் இன்று குறித்த நேரத்திற்குள் பணிக்‍கு வராத அரசு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்ய அம்மாநில முதலமைச்சர் திரு. நாராயணசாமி, தலைமைச் செயலாளருக்‍கு உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் மக்‍கள் நலத்திட்டங்கள் தொடர்பான கோப்புகள் தேங்கியிருப்பதாக முதலமைச்சர் அலுவலகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து முதலமைச்சர் திரு. நாராயணசாமி இன்று காலை ஒன்பதே கால் மணிக்‍கு தனியாக அரசு தலைமைச் செயலக அலுவலகத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது குறித்த நேரத்திற்கு பணிக்‍கு வராதவர்களின் பெயர்களை குறித்துக்‍ கொண்டு அவர்கள் மீது நடவடிக்‍கை எடுக்‍க உத்தரவிட்டார். மேலும் விடுமுறையில் சென்றவர்களின் விடுப்பு கடிதங்களையும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது பெரும்பாலான தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உரிய நேரத்தில் பணிக்‍கு வராததைக்‍ கண்டு அவர் அதிருப்தி அடைந்தார். 30 சதவிகித ஊழியர்கள் மட்டுமே பணிக்‍கு வந்ததாகவும், வருகைப் பதிவை தெரிவிக்‍க பயன்படும் பயோ மெட்ரிக்‍ கருவியை ஊழியர்கள் பழுதாக்‍கி விட்டதாகவும் கூறினார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என்றும் எச்சரித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00