காஷ்மீர் சிறுமி ஆசிஃபா பாலியல் வன்கொடுமைக்‍கு ஆளாக்‍கப்பட்ட வழக்கு தொடர்பாக பதிலளிக்க ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் - சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவு

Apr 16 2018 6:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி ஆஷிபா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கு தொடார்பாக பதிலளிக்க ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. சிறுமியின் குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கத்துவா பகுதியைச் சேர்ந்த ஆசிஃபா என்ற 8 வயது சிறுமி, கடந்த வாரம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்‍கிறது. இதில் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்‍கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கத்துவா மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்த வழக்‍கின் விசாரணை இன்று தொடங்கியது. இதற்காக 7 பேரும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்‍கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 28-ம் தேதிக்‍கு ஒத்திவைக்‍கப்பட்டிருப்பதாகவும், எந்த சோதனைக்‍கும் தாங்கள் தயாராக இருப்பதாகவும், குற்றம் சாட்டப்பவர்கள் சார்பில் ஆஜரான வழக்‍கறிஞர் தெரிவித்தார்.

இதனிடையே, இந்த வழக்‍கை கத்துவா நீதிமன்றத்திலிருந்து பஞ்சாப் மாநிலம் சண்டிகருக்‍கு மாற்றக்‍கோரி சிறுமி ஆசிஃபாவின் பெற்றோர் தொடர்ந்த வழக்‍கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இவ்விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் அவர்களின் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிறுமியின் வழக்கறிஞர் Deepika Rajawat, சிறுமி ஆஷிபாவின் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் இதற்காக நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும் எந்த நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றாலும் அதனை உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00