பலத்த பாதுகாப்புக்கு இடையே காஷ்மீர் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி - கஷோக் பாகுலா பிறந்த நாள் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பு
May 19 2018 1:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பலத்த பாதுகாப்புக்கு இடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, கஷோக் பாகுலா பிறந்தநாள் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அப்போது பேசிய திரு. நரேந்திர மோடி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்காக இன்று ஒரே நாளில் மட்டும் 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். பிரதமரின் வருகையையொட்டி ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.