ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை - 4 தீவிரவாதிகள் பலி - பயங்கர ஆயுதங்கள், வெடி பொருட்கள் பறிமுதல்
May 19 2018 6:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கர ஆயுதங்கள், வெடி பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள Handwara பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக நேற்றிரவு பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனைதொடர்ந்து இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. பல மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், வெடி பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.