எடியூரப்பாவின் ராஜினாமா ஜனநாயத்திற்கு கிடைத்த வெற்றி என காங்கிரஸ் தலைவர்கள் கருத்து - ஜனநாயகம் வென்றது என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி டிவிட்டரில் பதிவு
May 19 2018 7:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே போதிய எம்.எல்.ஏக்களின் பலம் இல்லாததால் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் உறுப்பினர்களுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்,
கர்நாடக சட்டப்பேரவையில், இன்று நடைபெறவிருந்த பெரும்பான்மைக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னரே, போதிய எம்.எல்.ஏ.க்களின் பலம் இல்லாததால், தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக எடியூரப்பாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் உறுப்பினர்களுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ஜனநாயகம் வென்றுள்ளதாகவும், கர்நாடக மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் திரு. தேவகவுடா, திரு. குமாரசுவாமி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக கூறினார். மேலும் இது பெரும்பான்மையுடையவர்களுக்கான வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து ஜனநாயகம் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், கர்நாடகா, காவியின் பின்னால் செல்லாது என்றும் இனி வண்ணமயமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்எல்ஏக்களை பேரம் பேச முயற்சித்ததாக எடியூரப்பா சட்டப்பேரவையில் ஒப்புக்கொண்டதாக சித்தராமையா தெரிவித்துள்ளார்.