நிரவ் மோடி லண்டனில் இருப்பதாக அமலாக்கத்துறை அறிவிப்பு : நிரவ் மோடியின் குடும்பத்தினருக்கு மின்னஞ்சல் மூலம் சம்மன்
May 20 2018 5:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடு செய்து, சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதனை திருப்பிச் செலுத்தாமல் தப்பியோடிய தொழிலதிபர் நிரவ் மோடி, லண்டனில் இருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடு செய்து, சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டார். அவர் இப்போது சிங்கப்பூர் அரசின் கடவுச்சீட்டில் லண்டனில் இருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிரவ் மோடியின் குடும்பத்தினருக்கு மின்னஞ்சல் மூலம் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களுக்குள் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர்கள் ஆஜராக வேண்டும் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.