டீசல் விலை மற்றும் சுங்கக்கட்டண உயர்வுக்கு எதிராக நாளைமுதல் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் - லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு
Jun 17 2018 4:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டீசல் விலை, சுங்கக்கட்டண விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைமுதல் நாடு தழுவிய அளவில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
டீசல் விலை, சாலை பயன்பாட்டுக்கான சுங்கக்கட்டணம், மூன்றாம் நபர் காப்பீட்டுத்தொகை ஆகியவற்றை மத்திய அரசு உயர்த்தியிருப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் தொழில் செய்ய முடியாத அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசுக்கு பல முறை கடிதம் எழுதியும், அதிகாரிகளிடம் பேச்சு நடத்தியும் சுமுகத் தீர்வு ஏற்படவில்லை என்றும், மத்திய அரசிடம் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை எனவும் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளைமுதல் தமிழகம் உட்பட நாடு தழுவிய அளவில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.