டெல்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ : தீயை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்புத்துறையினர்
Jun 19 2018 3:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பற்றிய தீயை, தீயணைப்புத்துறையினர் கடுமையாக போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தலைநகர் டெல்லி அமர்காலனி பகுதியில் செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் நள்ளிரவில் திடீரென தீப்பற்றியது. தொழிற்சாலையில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் இருந்ததால், தீ கொழுந்துவிட்டு மளமளவென பற்றி எரிந்தது. தகவலின்பேரில் 25 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த வீரர்கள், கடுமையாக போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொழிற்சாலை முழுவதும் மளமளவென பற்றியெரிந்த தீயில், தொழிற்சாலையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.