மக்கள் ஜனநாயக கட்சி - பாரதிய ஜனதா கூட்டணி முறிந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேசிய மாநாட்டுக் கட்சி முயற்சிக்கவில்லை : உமர் அப்துல்லா பேட்டி

Jun 19 2018 5:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

மக்கள் ஜனநாயக கட்சி - பாரதிய ஜனதா கூட்டணி முறிந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேசிய மாநாட்டுக்‍ கட்சி முயற்சிக்கவில்லை என்று அம்மாநில ஆளுநரை சந்தித்தபின் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணி முறிந்ததை அடுத்து, ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் பதவியை மெஹ்பூபா முப்தி ராஜினாமா செய்தார். இதையடுத்து, அங்கு ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அம்மாநில ஆளுநர் Narinder Nath Vohra-வை தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான திரு.உமர் அப்துல்லா சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மக்கள் ஜனநாயக கட்சி - பாரதிய ஜனதா கூட்டணி முறிந்த நிலையில், காஷ்மீரில் ஆட்சி அமைக்க தேசிய மாநாட்டுக்‍கட்சி முயற்சிக்கவில்லை என்று கூறினார். மேலும், ஆளுநர் ஆட்சியை நீண்ட நாள் நீடிக்கக்‍ கூடாது என்று வலியுறுத்தியதாக தெரிவித்தார். புதிய அரசு அமைய வேண்டும் என்றும், சரியான ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00