தமிழகத்தில் தற்போது நிலவும் பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை : மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேட்டி
Jun 21 2018 5:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் தற்போது நிலவும் பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருமதி. சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தியதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு. கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான திரு. கமல்ஹாசன், கட்சியின் பதிவிற்காக டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் நேற்று காலை தேர்தல் ஆணைய அலுவலகம் சென்ற அவர், கட்சி விவரங்களை முன்வைத்தார். பின்னர் காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தியை நேரில் சந்தித்துப் பேசினார். ராகுல் காந்தியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும், பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருமதி. சோனியா காந்தியை, திரு. கமல்ஹாசன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் தற்போது நிலவும் பிரச்னைகள் குறித்து சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தியதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, இன்று மேலும் சில காங்கிரஸ் தலைவர்களை கமல்ஹாசன் சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு கர்நாடக முதலமைச்சர் திரு. குமாரசாமியை, கமல்ஹாசன் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.