வரும் ஆண்டுகளில் அந்தந்த மாவட்டங்களிலேயே மாணவர்கள் நீட் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜவடேகர் பேட்டி - மாநில அரசு பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படும் எனவும் அறிவிப்பு
Jun 22 2018 6:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வரும் ஆண்டுகளில் அந்தந்த மாவட்டங்களிலேயே மாணவர்கள் நீட் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மாநில அரசு பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர், வரும் ஆண்டு முதல் அந்தந்த மாவட்டத்திலேயே நீட் தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவித்தார். ஒரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதே மாவட்டத்தில் நீட்தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும் என்றும், தேசிய கல்விக் கொள்கை விரைவில் கொண்டு வரப்படும் எனவும் குறிப்பிட்டார். தமிழக அரசு நல்ல மொழிப்பெயர்ப்பாளர்களை நீட் தேர்வு வினாத்தாள் தயாரிக்க அனுப்ப வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.