கியூபாவிற்கு அரசுமுறை பயணமாக சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அந்நாட்டு அதிபருடன் சந்திப்பு : இருநாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
Jun 23 2018 10:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கியூபாவிற்கு அரசுமுறை பயணமாக சென்ற குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த், அந்நாட்டு அதிபரை சந்தித்துப் பேசினார். அப்போது இருநாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
கிரீஸ், சுரினேம் உள்ளிட்ட நாடுகளுக்கு அரசு முறைப் பயணத்தை மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் கியூபா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனது மனைவியுடன், ஹவானாவில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று திரு.ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார். முன்னதாக, அந்நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, அவர் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, அந்நாட்டு, அதிபர் மிகேல் தியாஸ்-கானெலை சந்தித்தார். அப்போது, இருநாட்டு தலைவர்களின் முன்னிலையில், இந்தியா-கியூபா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.