இந்திய வங்கிகளில் பெற்ற கடனை திருப்பி செலுத்தாமல் லண்டனில் தலைமறைவாக உள்ள விஜய்மல்லையாவை, தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் : மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல்
Jun 23 2018 4:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய வங்கிகளில் பெற்ற கடனை திருப்பி செலுத்தாமல், லண்டனில் தலைமறைவாக உள்ள விஜய்மல்லையாவை, தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கக் கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி உள்பட பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத விஜய்மல்லையா லண்டனுக்கு தப்பியோடினார். இதையடுத்து, அவரை கைது செய்து இந்தியா கொண்டு வருவதற்கும், மோசடி செய்த பணத்தை மீட்கும் முயற்சியிலும் மத்திய அரசு தீவிரம் காட்டியது. இதற்கான நடவடிக்கையில் அமலாக்கத்துறை, சி.பி.ஐ ஈடுபட்டு வருகிறது.
இதனிடையே, வங்கிகளில் பெற்ற கடனை திருப்பி செலுத்தாமல், வெளிநாடுகளுக்கு தப்பிக்க முயற்சி செய்யும் நபர்களை தடுக்கும் வகையில், மத்திய பாஜக அரசு புதிதாக அவசர சட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், லண்டனில் தலைமறைவாக உள்ள விஜய்மல்லையாவை, தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கக் கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது.