உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்திய மூத்த நீதிபதி செல்லமேஸ்வரர் ஓய்வு பெற்றார்
Jun 23 2018 12:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்திய மூத்த நீதிபதி திரு. செல்லமேஸ்வரர் ஓய்வு பெற்றார். நீதித்துறையின் செயல்பாடுகளை ஆய்வுக்குட்படுத்த வேண்டுமென்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நீதிபதி செல்லமேஸ்வரர் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு திடீரென செய்தியாளர்களை சந்தித்த செல்லமேஸ்வரர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். முக்கிய வழக்குகள் மூத்த நீதிபதிகளுக்கு ஒதுக்கப்படுவதில்லை என்று அவர் குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் செல்லமேஸ்வரர் நேற்று ஓய்வுபெற்றார்.
முன்னதாக செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், இந்திய தேசத்தில் அனைத்து துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகளையும் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்றும், உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்யவேண்டும் என்றும் செல்லமேஸ்வரர் தெரிவித்துள்ளார்.