மத்திய பிரதேசத்தில் தேர்தலுக்கு தயாராகிறது பா.ஜ.க. - 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
Jun 23 2018 4:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய பிரதேசத்தில் மோகன்புரா நீர்ப்பாசன திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி, இந்த திட்டத்தை துவக்கி வைப்பது பெருமை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைப்பதற்கான முயற்சிகளில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளது. அதற்காக இம்மாநிலத்தில் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி முதல் திட்டமாக மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் புதிதாக 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட மோகன்புரா நீர்ப்பாசன திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மோடி, மத்திய பிரதேச மக்களுக்காக 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மோகன்புரா நீர்ப்பாசன திட்டத்தை துவக்கி வைப்பது பெருமை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்திய நாட்டை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரு கட்சி, மக்களையும், அவர்களின் கடின உழைப்பையும் நம்பவில்லை என மோடி குற்றம்சாட்டினார்.