2019ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கு களமிறங்கும் நரேந்திர மோடி - வரும் பிப்ரவரி மாதத்திற்குள் 50 பிரச்சார கூட்டங்களில் பங்கேற்க திட்டம்
Jul 14 2018 2:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலையொட்டி பிப்ரவரி மாதத்திற்குள்ளாக நாடெங்கிலும் 50 இடங்களில் பிரதமர் நரேந்திரமோடி பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு மக்களவை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பாஜக தேர்தல் பிரச்சார பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதில் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரதமர் நரேந்திரமோடி வரும் பிப்ரவரி மாதத்திற்குள் நாடு முழுவதும் 50 இடங்களில் பிரச்சாரம் செய்ய இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 100 க்கும் மேற்பட்ட மக்களவை தொகுதிகளை உள்ளடக்கியதாக பிரதமர் மோடியின் பிரச்சார பயணம் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பாஜக தலைவர் அமித்ஷா, கட்சியின் மூத்த தலைவர்களான ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோரும் தலா 50 இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அக்கட்சியின் தொண்டர்களை தேர்தலுக்கு தயார் செய்யும் விதமாக பிரச்சாரம் இருக்கும் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.