கேரள அரசின் திரைப்பட விருது வழங்கும் விழா : நடிகைகளின் எதிர்ப்பை மீறி மோகன்லால் பங்கேற்பு
Aug 9 2018 4:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரள அரசு சார்பில் திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. பல்வேறு சர்ச்சைகளுக்குப்பின் நடிகர் மோகன்லால் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கேரள அரசு சார்பில் திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. கேரள முதல்வர் திரு. பினராயி விஜயன், நடிகர் திரு. மோகன்லால் ஆகியோர் இந்த விழாவினை தொடங்கி வைத்தனர். முன்னதாக நடிகர் திலீப்பை மீண்டும் கேரள நடிகர் சங்கத்தில் இணைத்துக்கொண்டதால் அதிருப்தி அடைந்த நடிகைகள் பலர், நடிகர் மோகன்லாலை இந்த விழாவிற்கு அழைக்கக்கூடாது என முதல்வருக்கு கடிதம் எழுதினர். ஆனால் இதனையும் மீறி மோகன்லாலுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த விவகாரம் கேரள திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மோகன்லால் நேற்று இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த குழப்பமான சூழ்நிலையை முடிவுக்கு கொண்டுவர நடிகைகள் பார்வதி, ரேவதி உள்ளிட்டோர் கேரள நடிகர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் இதில் சுமூக முடிவு எட்டப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.