கேரளாவில் கனமழை, நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு : இடுக்கி அணை திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
Aug 9 2018 5:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு இடங்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
கேரள மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வயநாடு, கன்னூர் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கேரளாவின் மிகப்பெரும் அணையான இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப்பின் இன்று திறக்கப்பட்டது. 2 ஆயிரத்து 403 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை தற்போது 2 ஆயிரத்து 398 ஆயிரம் அடி கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் பெரியார் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், கேரளாவின் பல்வேறு அணைகளும் திறக்கப்பட்டுள்ளன. தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.