ராஜீவ்காந்தி படுகொலை வழக்‍கில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்‍க முடியாது - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூடுதல் ஆவணங்கள் தாக்‍கல்

Aug 10 2018 4:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராஜீவ்காந்தி படுகொலை வழக்‍கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூடுதல் ஆவணங்கள் தாக்‍கல் செய்துள்ளது.

ராஜீவ்காந்தி படுகொலை வழக்‍கில் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோருக்‍கு தூக்‍கு தண்டனை விதிக்‍கப்பட்டிருந்தது. இவர்களது கருணை மனு நிலுவையில் இருந்த காரணத்தால் தூக்‍கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைந்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனையில் உள்ளனர். இவர்களை விடுவிக்‍க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய 3 பேரை விடுதலை செய்யும் தீர்மானத்தை, மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா, கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் கொண்டு வந்து, அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து மத்திய அரசு வழக்‍கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்‍கில் மத்திய அரசு இன்று கூடுதல் ஆவணங்களை தாக்‍கல் செய்துள்ளது.

சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் வழக்‍கு அரிதினும் அரிதான வழக்‍கு என்றும், அவர்களை விடுதலை செய்தால் பல கைதிகளுக்‍கு அது முன்னுதாரணமாக இருந்துவிடும் என்றும், அந்த மனுவில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00